Posts

Showing posts with the label அழகப்பன்

மாறாத முருகனும் – மாறனும், மாயனும் தமிழ் சிறுகதைகள் தொகுப்பு - அழ.குழ.மா.அழகப்பன் tamil short story by M. Alagappan maaratha Muruganum Maranum mayanum

Image
மாறாத முருகனும் – மாறனும், மாயனும் -----Alcohol is injurious to health---- "முருகனுக்கு ஒரு பொண்ணு பாருங்க. இப்படியே போச்சுன்னா குடிச்சு கும்மாளமடிச்சு வீணா போயிடுவான்" என்றார் ராகவி கருப்பசாமியிடம். அதற்கு கருப்பசாமி, "அவனுக்குலாம் எவன் பொண்ணு கொடுப்பான். யாருகிட்ட போய் பொண்ணு கேட்பேன். புரிஞ்சு தான் பேசுறீயா. எந்த வேலைக்கு போனாலும் 6 மாசம் கூட இருக்க மாட்றான். அவனுக்கு ஒரு பொண்ண கட்டி வச்சு அந்த பொண்ணோட வாழ்க்கையும் பாழாக்க சொல்றியா. அந்த பாவத்தை வேற சுமக்க சொல்றியா. அவன் பாட்டுக்கு இப்படியே இருக்கட்டும்."  என்றார்       "வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்துட்டு காண்டாமிருகமுனு பேறு வச்சானாம். அது மாதிரில இருக்கு நீங்க சொல்றது, எவனையோ சொல்ற மாதிரி சொல்றீங்க. நம்ம பிள்ளைங்க அவன். அவனுக்கேத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைச்சா,  கண்டிப்பா அவன் நல்லா இருப்பான். போனவாரம் ஜோசியர பார்த்தப்போ அவரு சொன்னாரு அவனுக்கு ஒரு கால்கட்ட போட்டா எல்லாம் சரியாகிடும்னு" என்றார் ராகவி.      கருப்பசாமி "அதெல்லாம் சரி நாம யார்கிட்ட போய் பொண்ணு கேட்கிறது....

"நண்பேன்டா" - சிறுகதை அழ.குழ.மா.அழகப்பன், சென்னை Nanbenda a short story about friendship in Tamil

Image
  " நண்பேன்டா " - சிறுகதை கதிர் , மோகன் , யுவன் , சந்திரன் , நளன் ஐவரும் நல்ல நண்பர்கள் . ஐவரும் சதுரகிரி மலையில் மலையேற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர் . மோகன் ஏற்கனவே நிறைய முறை சென்றிருந்ததால் அவன் தான் தலைமை தாங்கி அழைத்துச் சென்றான் . மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் நேர் வழியில் செல்ல அனுமதி கிடைக்கவில்லை . மோகன் மாற்றுப் பாதையில் செல்ல அனைவரையும் பணித்தான் . " மழையினால் ஆபத்து வரும்ன்னு தானே அனுமதிக்கல . அப்புறம் எதுக்குடா ரிஸ்க் " என்றான் நளன் . இயல்பாகவே நளன் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன் . " அதெல்லாம் ஒன்னும் பயப்பட வேண்டாம் நேர் வழியில் மழை பெய்யுறப்போ காட்டாற்று வெள்ளம் திடிரென ஏற்பட்டு   நிறைய உயிரிழப்புகள் ஏற்படும் . அதற்கு தான் அனுமதிப்பதில்லை . ஆனால் நம் செல்லும் பாதையில் தண்ணீர் வராது . ஏற்கனவே மழைக்காலத்தில் இந்த பாதை வழியாக தான் செல்வோம் . டேய் பயப்படாதே, எல்லோரும் சேர்ந்தே போவோம் . மேலே ஏறி திரும்பி கீழே வர்றது வரை கண்டிப்பா நான் கூடவே வருவேன் டா ....