Posts

Showing posts with the label Healthy Snacks

பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர எளிய மூலிகைபல்பொடி For all dental problems simple herbal toothpaste

Image
 பல் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர  எளிய  மூலிகைபல்பொடி  தயாரிக்கும் முறை :- 🌿🍃🍀☘️🥗🌳☘️🍀🍃🌿  பல்பொடி தயாரிக்க😁  தேவையான பொருட்கள் :- கிராம்பு பொடி                - 25 கிராம் கடுக்காய்  பொடி           - 40  கிராம் ஆலம் பட்டை பொடி.    - 25 அக்ரகாரம் பொடி          -10 கிராம் நாயுருவி வேர் பொடி  - 25 கிராம் கல் உப்பு பொடி              - 10 கிராம் இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் . இந்த மூலிகைகளை பற்றி 1 நிமிடம் பார்த்த பின்பு பல்பொடி தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.. 1 . கிராம்பு - பற்றி அனைவருக்கும் தெரியும் ..பல்வலியை சரிசெய்து பற்களில் உள்ள கிருமிகளை அழிக்கும். 2 . கடுக்காய் -  அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடுக்காய் பயன்படுத்தி தான் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் ..கடுக்காய் சேர்த்து கட்டப்பட்ட கட்டிடம் அவ்வளவு எளிதில் உடைபடாதாம்..கடுக்காய் வைத்து பல் ...

கோணிபுளியங்காய் / கொடுக்காபுளி/ சீனிப்புளியங்காய் 90's Kids favorite fruit

 கோணிபுளியங்காய் 🌿🙏🌸🌼🍁🥒🥗🍉🥭🌿 30 ஆண்டுகளுக்கு முன் இந்த சுவையை உணரா நபர்கள் இல்லை...துவர்ப்பு இனிப்பு புளிப்பு கலந்த அற்புத சுவை....😋😋😋 ஆப்பிளை விட அதிக விலை கொடுக்காபுளி எனப்படும் சீனிப்புளியங்காய் கோவை பெரியகடை வீதியில் மூலிகைகடைக்கு செல்லும் வழியில் இதை பார்த்ததும் வாங்கும் ஆசையில் விலையை கேட்டேன் கிலோ 250 ரூபாய் எனக்கூறினர். கலிபோர்னியாவின் ஆப்பில்170.ருபாய் தான் . 🍋கிராமங்களில் பரவிகிடக்கும் இந்த மரம் இன்று நகரங்களில் எட்டா கனியாக இருக்கிறது. 👌ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது. 🍅செரிமானம் மேம்படுத்தவும், கீல்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும். 🍁வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது.  🌸நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது. இது ஒரு சிறிய புளிப்பான பழம்.  🍒உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரை...

ஜில் ஜில் கூல் மண்ணில் பிரிட்ஜ். Fridge made of clay

 ஜில் ஜில் கூல் மண்ணில் பிரிட்ஜ்... 🌿🌳👏🙏👌🌼👆🧊💧 இனி ஓசோனையும்,மனித உறுப்புகளையும ஓட்டை போடும் எலெக்ட்ரிக் பிரிட்ஜ் இனி தேவை இல்லை...மின்சார கட்டணமும் மிச்சம். மண்பானை தொழில் செய்வோர் கால மாற்ற நிலையை கண்டு நம் நிலையை சற்று மாற்றி அமைத்தல் அவசியம். 1,500 ரூபாய் ஒரு பானை பிரிட்ஜில் 5 கிலோ வரை வைக்கலாம் பலர் இப்போது மின்சாரத்தில் இயங்கி ஓசோனையும், மனித உறுப்புகளையும் நோய் தந்து ஓட்டை போடும் பிரிட்ஜ் உபயோகத்தை தற்சார்பு அறிவாளிகள் நிறுத்த தொடங்கி தற்போது உபயோகப் படுத்துவது இல்லை. மண் பானை போலதான் ! பீன்ஸ், முட்டைக்கோஸ் தவிர மற்றவை எல்லாம் அப்படியே புதியதாக உள்ளது.  தக்காளி + மிளகாய் 10 நாள். வெண்டைக்காய் + கருவேப்பிலை + தேங்காய் 12நாள் சாலட் காய் கறிகள் லெட்யூஸ், க்ரீன் பெப்பர், சோளம் 14 நாள் இஞ்சி+பெல்லாரி+நாட்டு வெங்காயம் 2 மாதம் உருளை+மரவள்ளி 3 மாதம் கத்திரிக்காய்க்கு மட்டும் ஒரு பானை.  16 நாள், அதன் பிறகு ஒன்று ஒன்றாக அழுகுகிறது. பானை வாயை ஈரத்துணி போட்டு மூடி வையுங்கள். உடல் கெடாது. மனம் கெடாது. திருநீலகண்டர் ஸ்டோர்ஸ் மண்பொருள் விற்பனையகம்  கருமத்தம்பட்டி கோய...

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள்

அடுப்பில்லா சமையல் செய்து அசத்தும் NGR பள்ளி ஆசிரியர்கள் 🌿🙏🥥🍵🥗🌼🌸🌿🍅🥒🍋               23.4.2021வெள்ளிக்கிழமை கோவை காமராஜர் சாலை, தியாகி NGR நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்ற அடுப்பில்லா சமையல் பயிலரங்கம் பள்ளியில் நடைபெற்றது.            மாணவ, மாணவியர் களுக்கான ஆரோக்கிய வாழ்வியலை கொண்டு செல்லவும் நமது பாரம்பரிய உணவுமுறை களையும் ஆரோக்கியம் தரும் அடுப்பில்லா சமையல் உணவுகளையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியாக வழங்கப்பட்டது.        ஒவ்வொரு இல்லங் களிலும் அடுப்பில்லா உணவுகளை கொண்டு செல்ல ஆசிரியர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நல்ல தொரு நிகழ்வாக அமைந்தது.  20 வகையான இயற்கை உணவுகளை  செய்முறை பயிற்சியுடன் கற்றுத் தரப்பட்டது.  நன்றி🍁 நிகழ்வில் கற்றுதரப்பட்ட  மதிய உணவாக வழங்கப்பட்ட இயற்கை உணவு வகைகள்... அருகம்புல் ஜுஸ் லெமன்புதினா ஜுஸ் முக்கனி சாலட் வல்லாரை கீர் எனர்ஜிலட்டு நுங்கு பாயாசம் வேர்க்கடலை சாலட் வாழைப்பூ பொரியல் பீட்ரூட் பேபிகார்ன் சாலட் பூசண...

அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும் Benefits of earthen pots

 🌿🙏 *அழகான மண்பாண்டங்களும் அதன்பயன்களும்.... நம் பாரம்பரிய அடையாளங் களுள் ஒன்றான பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு,  புதிய மண் பானையில் பச்சரிசியால் பொங்கலிடுவது வழக்கம். இப்படிப் பொங்கல் திருநாள் மட்டுமல்ல...    முந்தைய தலைமுறை வரை அன்றாடப் பயன் பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் வகித்தன. ஆனால், இன்றைக்கு 'நாகரிகம்' என்ற பெயரில், அவற்றை யெல்லாம் மறந்து விட்டோம்.                 பொங்கலன்று கூட அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கடமைக்காகப் பொங்கல் வைப்பதே பெரும் பாலும் நடக்கிறது.        அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பர்ய உணவு வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மண்பானையில் சாதம், மீன்குழம்பு, ஆப்பம், பணியாரம் எல்லாம் செய்கிறார்கள். இவற்றைச் சமைக்க அலுமினியம், காப்பர், எவர்சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்பாண்டங் களையே பயன்படுத்து கிறார்கள்.            ஹோட்டல்களிலும் மண்பாண்டங் களில் சமைத்துப் பரிமாறுவதை வாடிக்கை யாளர...

No Oil, No Boil... Healthy ayul... புற்றுநோயை குணமாக்கும்.... சிறுநீரக மண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய் மில்க் சேக்

 No Oil, No Boil...  Healthy ayul...🌿🙏  புற்றுநோயைகுணமாக்கும்.... சிறுநீரகமண்டலத்தை சீரமைக்கும் கத்திரிக்காய்மில்க்சேக்...🍆🍆🍅 தேவையானபொருட்கள் நாட்டுகத்திரிக்காய் - 4 தக்காளி - 2 தேங்காய்ப்பால் - 50 மில்லி, வெல்லம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன் அல்லது கரும்புஜுஸ் - 1/4 கப், ஏலக்காய் 4 செய்முறை  கத்திரிக்காய், தக்காளி ஆகியவைகளை துண்டுகளாக  வெட்டிக் கொள்ளவும். மிக்சியில்  போட்டு ஒரு சுற்று சுற்றவும்.பின் அதில் வெல்லம், தேங்காய்ப்பால் சேர்த்து அடிக்கவும். பிறகு அதில் தண்ணீர் சேர்த்து அடித்து நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும். தேவையெனில் முந்திரி, பாதாம் பொடியாக நறுக்கி தூவியும் பரிமாறலாம். ருதம்பராயோகா கோவை.

​ரோஜா குல்கந்து செய்முறை how to make gulkand at home

Image
 நல்ல தரமான சுவையான "ரோஜா குல்கந்து" வீட்டிலேயே  தயார் செய்வது எப்படி. .? 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹 குல்கந்து செய்முறை 🌸நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். 🌸 இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு பனங்கற்கண்டை எடுத்துக் கொள்ளவும்.  🌸ரோஜா இதழ்களையும், பனங்கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும்.  🌸இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும். இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். 🌸 இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும். 🌸ஆண்மையை பெருக்கும், உடல்வெப்பத்தை குறைக்கும், இதயத்தை வலுப்படுத்தும், பெண்கள் நோய்களை குணமாக்கும், உடல்வளர்ச்சியை மேம்படுத்தும் நறுமணமும் உடல் நலமும் தரும் குல்கந்து ரெடிங்க.... 🍁ருதம்பரா யோகா கோவை.

வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள் Fenugreek water benefits

Image
 வெந்தய நீரை வடிகட்டி இப்படி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்.. ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள். வெந்தய டீ தயாரிப்பது எப்படி? ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள். இப்போது வெந்...

உணவே மருந்து. அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க !

Image
 அகத்தியர்,தேரையர் சித்தர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க ! கொரனாவை என்ன ! அதன் மூலத்தை கூட விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக விரட்டலாம் எனும் அகத்தியர் பெருமானின் ஆலோசனையை கடைபிடிப்போம். கிருமிகளின் எதிர்ப்பு மருந்தாக சுண்டைக்காய் இருக்கிறது என்கிறார் அகத்தியர் பெருமான் தனது வைத்திய  நூலில் .... நெஞ்சின் கபம் போம் நிறை இருமி நோயும் போம் விஞ்சு வாதத்தின் விளைவு போம் வஞ்சியரே வாய் கசபிக்கும் மாமலையில் விளையும் சுண்டைக் காயை சுவைப்பதர்கே* - அகத்தியர் நெஞ்சில் எந்த கபச் சளியும் நீக்கும். எந்த கிருமியானாலும் வரும் நோய்களும் போய் விடும். வாதசுரம் வலியும் போக்கும். அப்புறம் என்ன இந்த அறிகுறி அனைத்தும் கொண்ட கொரோனா வைரஸ் மட்டும் அகத்திய பெருமான் சொல்லும் சுண்டைக்காயிடம்  தப்பி விடுமா என்ன ! சுண்டைக்காய் சிறிது என உதாசீனம் செய்து விடாதீர்கள். மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பது நம் நாட்டின் சுண்டைக்காய்க்கும் பொருந்தும். உணவே மருந்து.🌿🙏 சுண்டைகாய் வத்தலை பொடித்து கசாயம் செய்யலாம்.... சுண்டைக்காய் துவையல், குழம்பு, தொக்கு, சட்னி என ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்தி பலன்பெறு...

சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்!!! வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!

Image
 கொல்லும் பிடரிதனை கோழையாமே.... சித்தர்கள் கோழையை எமன் என்று கூறுகிறார்கள்.... நுரையீரல் மட்டுமல்லாது உடலில் தேங்கும் கோழையை விரட்டும்.... வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி!🌿🙏 🌿🍁முக்கூட்டு சூரணம் காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக மூலிகை கடைகள், காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்). இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும். இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளில் இருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள், சளிபடலங்கள் வெளித் தள்...

தேன் நெல்லிக்காய் Honey Gooseberry

Image
 தேன் நெல்லிக்காய் 🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈 சித்தஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன் ருதம்பரா யோகாமையம் செல் : 8610823072 🌼🌸☘🌷🌿🌷☘🌸🌼 என்றும் இளமைதரும்.... சங்ககாலம் தொட்டு ஆரோக்கிய பொக்கிஷமாம் ஔவைக்கு அதியமான் அளித்த அமுதகனி.... தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது. ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?🤔 கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கிறார்கள். சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ ...

கழிவின் தேக்கம் நோய்கள் கழிவின் நீக்கம் ஆரோக்கியம் Clean your Intestine

Image
 கழிவின் தேக்கம் நோய்கள் கழிவின் நீக்கம் ஆரோக்கியம் குடல்சுத்தம்உடல்சுத்தம்🌿🙏 விளக்கெண்ணெய் 20 Ml..   ஒரு எலுமிச்சப்பழ சாறு கலந்து அதிகாலை 4 மணிக்கு நாக்கில் படாமல் மடக்கென்று குடித்து விடவும்   விடிவதற்குள்ளாக ஒரு 2 (அ) 3 லிட்டர் தண்ணீரை விடாமல் குடித்து கொண்டே வந்தால் வயிறு ஒரு 8 மணிக்குள் முழுவதுமாக  சுத்தம் செய்யப்படும். ஒவ்வொரு முறை கழிவை வெளியேற்றிய பின் ஒரு சொம்பு அளவு தண்ணீரை மிதமான சூட்டில் பருகவும்... ஆறு முறைக்கு பிறகு நல்ல சூடான ஒரு டம்ளர் நீரில் ஒரு முழு எலுமிச்சை சாறை கலந்து  அருந்த பேதி கட்டுப்படும். அன்றைய தினம் மிதமான உணவுகளை எடுத்துக் கொள்வதுநலம் (ரசம்சாதம்) விடுமுறை தினத்தில் செய்வது நல்லது லாக்டவுன்தானுங்களேஇது குடல்சுத்தம் செய்ய சரியான தருணம்🌿🙏 முன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங் களுக்கு ஒரு முறையோ அல்லது உங்களுக்கு தேவை என்று நினைக்கும் போதோ இதை தாராளமாக செய்து கொள்ளலாம். பலன்கள் பலநூறு உண்டு.... ருதம்பரா யோகா மையம் கோவை

பஞ்சசுத்தியில் ஒன்று | சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் Karisalai nei

Image
 பஞ்சசுத்தியில் ஒன்று  சித்தர்கள் நுரையீரலில் உருவாகும் கோழையை (சளியை) யமன் என்ற பெயரில் அழைத்தார்கள். ஏனெனில் இந்த சளியாகிய கோழைதான் மரணத்திற்கு மிக முக்கிய காரணி. உடம்பில் சளியானது சேர சேர உடல் இயக்கம் குறைகிறது. இரத்த ஓட்டம் தடைபடுகிறது. எலும்புகள் வலுவிழக்கிறது. நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் நடமாடும் பிணமாக மனிதன் ஆகிவிடுகிறான். எனவே சளித்தொல்லை இல்லாமல் வாழுகிற மனிதன் தான் நிஜமான ஐஸ்வர்யவனாவான் எனலாம். சளித்தொல்லை என்றால் மூக்கடைத்து கொண்டு ஒழுகுதல் மட்டுமே என்ற எண்ண வேண்டாம் எப்போதுமே உடலில் கோழையானது தங்கிக் கொண்டே இருக்கும் அது மிகுதியாகும் போது உடலை தொல்லை செய்யும். இந்த சளித்தொல்லையை முற்றிலுமாக நீக்குவதற்கு சித்தர்கள் கபசுத்தி என்ற பெயர் கொடுத்து கரிசாலை நெய் என்ற அற்புதமான மருந்தையும் கூறி இருக்கிறார்கள். கரிசாலை நெய்யை பற்றி பேசாத சித்தர்களே இல்லை என்று சொல்லலாம் சித்தர்களின் மருத்துவ முறையில் மணிமகுடமாக இருப்பது கரிசாலை நெய் என்றால் அது மிகையில்லை. இந்த நெய்யை சற்று முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  கரிசலாங்கண்ணி (வெள்ளை) கீரையை வேரோடு ...

மஞ்சள்காமாலை குணமாக்கும், ஃபேட்டிலிவர், சிறுநீரககோளாறு, மாதவிடாய்கோளாறுகள் நீக்கும் கீழாநெல்லி சட்னி

Image
 👌ஆயுசு நூறு தரும் ✋ஆரோக்கியமான வாழ்வு தரும்  🔥அடுப்பில்லா சமையல்  மஞ்சள்காமாலை குணமாக்கும் ஃபேட்டிலிவர், சிறுநீரககோளாறு,  மாதவிடாய்கோளாறுகள் நீக்கும் 👌👍🌿🌿☘️  அற்புத ஆற்றல் நிறைந்த  கீழாநெல்லி சட்னி ☘️🌿☘️🌿☘️🌿☘️🌿🥙       கீழாநெல்லி கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மஞ்சள் காமாலை,  முடக்குவாதம், மலச்சிக்கல், நாட்பட்ட நுரையீரல், சிறுநீரக கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானபொருட்கள் : 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 கீழாநெல்லி கீரை - 1 கப் நறுக்கிய கொத்தமல்லி தழை - 1கைபிடி இயற்கை தயிர் - ½ கப்  சின்னவெங்காயம் - 8  நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்   உளுந்து பருப்பு - 2 ஸ்பூன்  பொ. கடலை.     - 2 ஸ்பூன் தே.துறுவல்.       - 2 ஸ்பூன் மிளகுத்தூள் தேவைக்கு கொடம் புளி கரைசல் - 1 ஸ்பூன் செய்முறை:🌱🍃  கீழாநெல்லி கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.சின்ன வெங்...

No Oil, No Boil 🌿Healthy Ayul.... அடுப்பில்லா ஆரோக்கிய உணவுகள்

Image
 No Oil  |  No Boil  🌿Healthy Ayul.... அடுப்பில்லா ஆரோக்கிய உணவுகள்🍅🍉🌾☘️🍵🍃  இதயத்தில் எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காய் இருக்க பயமேன்! 🌿🙏🥗👏 ஆம் இயற்கை உணவு முறையில் அனைத்து நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரஷரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரவில்லை என்றால் எங்கள் ஆலோசனைப்படி தினமும் 🙏🌿🥗 ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி பொடி செய்து உடன் வேர்க்கடலை தூள்,  எலுமிச்சை சாறு, மிளகு தூள் கலந்து காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் பத்து நாட்களில் அடைப்புகள் நீங்கி  இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்....வரும். வாழைக்காயின் ரகசியம்  இதயம் சீராக செயல்பட பொட்டாசியம்(துவர்ப்புச் சத்து மிக அத்தியாவசிய மாகிறது. இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாக வோ சாப்பிட ஒரு நாளைக்குத்தேவையான பொட்டாசியம் வாழைக் காயின் மூலமே கிடைக்கிறது. வாழைக்காயில் நார்...

அடுப்பில்லா வெண் பொங்கல் செய்முறை

 ஆத்ம வணக்கம்🌿🙏👏 உணவே நல்மருந்து தலைப்பில் இன்று நாம் ரசித்து சுவைத்து ருசிக்க இருப்பது....  🔥அடுப்பில்லாமல் 💧ஆயில் இல்லாமல்... 🌞உங்கள் ஆயுளை நூறாக மாற்றும் அடுப்பில்லாசமையல்  அடுப்பில்லா வெண் பொங்கல் செய்முறை ஊற வைத்த வெள்ளை அவல்( கொஞ்சம் நன்கு ஊற வைத்தது) தேங்காய் பாலில் ஊற வைத்தால் சிறப்பு🌿🙏😊 ஊற வைத்த பாசி பருப்பு விழுது அரைக்க சிறிது தேங்காய் ஓரு சிட்டிகை சீரகம், இஞ்சி,  மிளகு  , சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும் மிகவும் நைசாக அரைக்க வேண்டாம்....தேவைகேற்ப முந்திரி...சிறிது பசுமையான கருவேப்பிலை சிறிது.... தேங்காய் பால் தேவைக்கு      செய்முறை🌿🙏👍 நன்கு ஊற வைத்த  நீர் இல்லாமல் பிழிந்த அவலில் , ஊற வைத்த பாசி பருப்பு , அரைத்த விழுது, மற்றும் கருவேப்பிலை, முந்திரி, தேங்காய் பால் தேவை எனில் நெய் சேர்த்துக்கொள்ளலாம்......  அனைத்தையும் நன்கு ஓன்றொரு ஓன்றாக கலந்து விடவும்... இப்பொழுது அடுப்பில்லா வெண்பொங்கல் தயார்..... நன்றி....... ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன் ருதம்பரா யோகா கோவை

பதநீர் - பயன்கள் Juice of toddy palm | palm juice natural

 பதநீர் - பயன்கள் இந்த பதநீர் ஒரு சைவ பானம் அதுமட்டும் அல்ல நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி. நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது. இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள். கோடை காலத்தில் தாகம் தணிக்க அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதை பருகினால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம். தொழு நோயை நீக்கும் பதநீர் நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ குறிப்பு உண்டு. மாதவிடாய் தடை மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி, வாய்வு, காட்டி முதலியவற்றினால் பெண்கள் அவதிப்படுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பரு...

NO oil NO boil Mixed vegetable salad healthy food habit

 NoOil. Noboil 🙏🌿☀️ ஆயுசு நூறுதரும்... ஆரோக்கியத்தை மேம்படுத்தும்... அடுப்பில்லா சமையல் *🥙🍈காய்கறிகலவை 1. பீர்க்கங்காய், சுரைக்காய்  கோவைக்காய், தக்காளி மாங்காய் அனைத்தும் பொடியாக நறுக்கவும் இத்துடன் உப்பு மிளகுப்பொடி மாங்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்.   2. கொத்தமல்லித்தலை தூவி எல்லாம் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். இதை உப்புமா தயிர்சாதத்தோடும் மற்றும் சப்பாத்தியை முக்கோண வடிவம் செய்து அதனுள் காய்கறிகளை உள்ளே வைத்து கொடுத்தால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பிரியமாக உண்பார்கள்.  Mixed vegetable salad 1. Cut ridge gourd, bottle gourd, ivy gourd, tomatoes raw mango into small pieces now add coriander leaves salt milagu powder amchor powder mix  2. Mix all together and can serve as dish dish to uppuma / curd rice or prepare roti make it cone shape fill vegetable stuff inside, everybody from children to elders will like this because looks colourful and tasty

உணவேநல்மருந்து தொப்பைக்கு குட்பை சொல்லும் கொடம்புளி

Image
 🌿 உணவேநல்மருந்து தொப்பைக்குகுட்பைசொல்லும் கொடம்புளி 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂 கொட்டைஅரிசிசோறு  கொடாம்புளிச்சாறு கருப்பட்டிதினம்சேறு உடல்பொன்னாகும்பாரு கொடம்புளி👌👌👌👌👌 கார்சினியாகாம்போஜியா என்று அழைக்கப்படும் குடம்புளி சிறிய பரங்கிக் காய் போன்ற தோற்றமுடியது. தமிழகம் மற்றும் கேரளாவில் வளரும் இந்த புளி நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் புளியைப் போன்றது தான். ஆனால் நம் ஊர் சாதா புளியைப் போல் அல்லாமல் கமகமக்கும். கொஞ்சம் துவர்ப்புச்சுவையும் கூடவே இருக்கும். அதிக பசி எடுக்கிறது அதனால் கண்டதை திண்ணு விடுகிறோம். என்று சொல் கின்றவர்கள் கொடம்புளியை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அது உங்கள் பசியை பற்றி யோசிக்கக் கூடாது என்ற கட்டளையை இடுகிறது. அதனால் உங்கள் உடல்எடையும் கூடாமல் இருக்கும். உடல்பருமனுக்கு முக்கிய காரணம் புளி காட்டில் புலி மானைக்கொல்லும் வீட்டில் புளி மனிதனைக் கொல்லும்.  கொடாம் புளியுடன் புதினா மிளகு சுவைக்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஜுஸ் செய்து பருக விரைவில் உடல்பருமன் குறையும். கொடம்புளியால் கண்நோய்கள் நீங்கும். பித்தநோய்கள் குணமாகும். உடல்...

நுங்குபாயாசம் அடுப்பில்லாசமையல் healthy food

Image
 🙏🌿 ஆயுசுநூறுதரும்  🔥அடுப்பில்லாசமையல் சுட்டெரிக்கும் வெப்பத்தை விரட்டும்....பாரம்பரிய சுவைமிகுந்த ஜில்லுனு🤩🧊🌨️ நுங்குபாயாசம்🥥🌴🧊🍏 ஆகா ஒரு முறை சுவைத்துதான் பாருங்கோ...அசந்து போவீங்கோ... 💧அம்மையை தடுக்கும் அருமருந்து... 👍நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துகிறது. 😢 அக்கிநோய் நீக்கும். 🌿 வேர்க்குரு, தோல் நோய்களை தடுக்கும் 🥥உடலில் தோல் மண்டலத்தை பலப்படுத்தும். உடல் சூட்டை சமன்படுத்தும். தேவையானபொருட்கள்- பதமான நுங்கு ஐந்து            தேங்காய்பால் இரண்டு டம்ளர இரண்டு கைபிடி பனஞ்சர்க்கரை முந்திரி பாதாம் பருப்பு,பிஸ்தா,ஏலக்காய் வகைக்கு ஐந்து  அனைத்தையும் மிக்ஸியில் இட்டு  சிறிது சிறிதாக தேங்காய் பால்விட்டு கலந்து அரைத்து பரிமாறவும்.🙏🌿🤩* மண்பானையில் வைத்து பரிமாறினால் சிறப்பு.😊 ருதம்பராயோகாமையம், கோவை. 86108 23072 ☘️🙏🙏🙏🙏🙏🙏🙏☘️