Posts

Showing posts with the label ground nut

நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி - ஒரு பார்வை. Peanut tincture is a yield multiplier - an overview.

Image
ஒரு கைப்பிடி அல்லது 25 கிராம் காய்ந்த அதே சமயம் வறுக்காத நிலக்கடலை சிறிதளவு நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும். ஊறிய பின் அதன் நீருடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த நிலக்கடலையை அன்று அரிசி கழுவும் நீரில் ஊற்றி நொதிக்கவிடவும். தினமும் மொத்தம் 10 நாட்களுக்கு அரிசி கழுவும் நீரை நிலக்கடலை கரைசலில் ஊற்றிக் கொண்டு வரவும். பருப்பு கழுவும் நீர், பால் பாத்திரம் கழுவும் நீரையும் சேர்க்கலாம். பத்து நாட்கள் நொதித்த பின் கரைசலை ஐந்து மடங்கு அல்லது சற்று கூடுதலான நீரில் கரைத்து நிலத்தில்/மண்ணில்/தொட்டியில் ஊற்றவும். நிலக்கடலை ஊற வைத்து அரைப்பதாலும் நொதிக்க விடுவதாலும் கடலையில் உள்ள எண்ணை சத்தை குறைக்க உதவி செய்யும். திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது. இந்த முறையில் எந்தவித செலவில்லாமல் அரிசி மற்றும் பால் பாத்திரம் கழுவும் நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம். 4 - 7 நாட்களில் செடிகளில் மாற்றத்தைக் காணலாம். பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்...

செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task | One day Liquid food task for healthy life

Image
 செவ்வாய்க்கிழமை ஒரு நாள் பழ சாறு Task கிற்கான தேவையான பொருட்கள் பதிவு..... எலுமிச்சை 2 தேங்காய் 1/2 முடி கற்றாழை 2 துண்டு இஞ்சி  தேன் நாட்டுசர்க்கரை 50 கிராம் ஊறவைத்த  வேர்கடலை 2 ஸ்பூன் வாழைப்பழம் 2 ஜாதிக்காய் 1  பீட்ரூட்  1/4 ஸ்பூன் (துருவியது) சாத்துக்குடி 2 பாதாம்பிசின் 1 ஸ்பூன் கல் உப்பு வெள்ளரிக்காய் 1 மிளகு அத்தி பழம்  2 திராட்சை 10  சப்போட்டா 2 வணக்கம் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் Task கிற்கான உணவு பதிவு....👇 காலை 6 to 8 எலுமிச்சை 1/4 பங்கு பழத்தில் சாறு எடுத்து, அதோடு ஒரு இன்ச் இஞ்சியில் கால் பங்கு அளவு எடுத்து துருவி பிழிந்து வடிகட்டி நீரும் தேனும் கலந்து புளிப்பில்லாமல் குடிக்கவும்...ஒரு வாய் மெதுவா மிழுங்கியதும் அடுத்து குடித்து வாய்முழுவதும் பட்டு போகுமாறு குடிக்கவும்....குறைந்தது 5 நிமிடம் குடிக்கவும் ஒரு டம்ளர் சாறை.... ( தேவைபட்டால் 10 மணிக்குள் இரண்டுமுறை எலுமிச்சை சாறு குடிக்கலாம் ) காலை 11 மணிக்கு  கற்றாழை ஜூஸ் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு சில துளிகள், நாட்டுச்சர்க்கரை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதோடு இரண்டு துண்டு கற்றாழை...

நன்கு நீர்த்த நிலையில் வேர்கடலை கரைசலை இளம் நாற்றுகளுக்கு பயன்படுத்தலாமா? கரைசலை தாங்கி வளருமா?

 கேள்வி: வேர்கடலை கரைசல் செடிகளுக்கு நல்ல பலனைத் தந்தது. இப்பொழுது தக்காளி, மிளகாய் ரகங்களை நாற்று விட்டுள்ளேன். அவற்றில் சில நல்ல வளர்ச்சியும் சில வளர்ச்சி இல்லாமலும் உள்ளது. நன்கு நீர்த்த நிலையில் வேர்கடலை கரைசலை இளம் நாற்றுகளுக்கு பயன்படுத்தலாமா? கரைசலை தாங்கி வளருமா? மானேரி பாலா: இந்த கேள்வியை படித்ததும் எனக்கு சில வருடங்களுக்கு முன் மக்கள் TV யில் மலரும் பூமி நிகழ்ச்சி தான் ஞாபகம் வந்தது. அதிக அளவில் நாற்றுக்கள் தயாரித்து விற்பவர் குழி தட்டிற்கான மண் தயாரிப்பை பற்றி விவரித்தார். மண் விலை அதிகம் என்பதாலும், தென்னை நார் கழிவு விலை குறைவாகவும், நாற்று விடுவதற்கு ஏற்ற ஊடகமாக இருப்பதாகக் கூறி வழிமுறைகளை விளக்கினார். Pleurotus என்ற காளான் வித்தைக் கொண்டு தென்னை நார்க் கழிவை மக்கவைத்து அத்துடன் ரசாயன உரங்கள் உயிரியல் ஊரங்கள் கலந்து தயாரிக்க ஒரு வருடம் எடுத்துக் கொள்வதாகக் கூறினார். குழி தட்டில் சிறிய குழியாக இருக்கும். அதில் இருக்கும் சிறிய அளவு ஊடகம் செடி வளர்ச்சி தேவைக்கு அனைத்து சத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். செடி வளர்ப்பிற்கு எப்படி ஆறப்போட்டு பக்குவபட...