மூலிகைதண்ணீர் Mooligai water Ayurvedic drinking water | Aarokya Vazhkkai
மூலிகைதண்ணீர் கோடை காலம் வந்து விட்டது.வெப்ப நோய் களிடம் இருந்து உங்களை காக்க, உடல் குளிர்ச்சி அடையை இன்னும் பலவற்றில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள நிறைய தண்ணி குடிங்க, நீர் காய்கள் நிறைய சாப்பிடுங்க. குடிக்கும் தண்ணீரையே எப்படி மூலிகை தண்ணீராக மாற்றி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் மூலிகை குடி நீரை தொடர்ந்து அருந்தி வந்தால் உடல்வலி , வாயுதொல்லை, அஜீரணம், வாந்தி, மயக்கம், தசை வலி, வயிறு சம்பந்த பட்ட தொல்லைகள், சிறு நீரக பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் ஆகியற்றில் இருந்து குணம் காணலாம் மேலும் உடல் வெப்பத்தை தனித்து குளிர்ச்சி யடையவும் செய்கிறது. நமது வீட்டில் உள்ள சமையல் பொருட்களை பயன்படுத்தி எளிமையான முறையில் தரமான மூலிகை குடி நீர் தயார் செய்து தினமும் பயன் படுத்தி கொள்ளலாம். வெய்யில் காலங்களில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மூலிகை குடி நீரை ஒரு முறை ருசித்து விட்டால் வேறு எந்த தண்ணீரையும் குடிக்க மனம் வராது. 🔹தேவையான மூலிகை பொருட்கள்: ஜாதிகாய், ஏலக்காய், லவங்கம் (கிராம்பு), வெட்டிவேர்,சுத்தமான வெள்ளை துணி, சுத்தமான குடி நீர் -1 லிட்டர். 🔸தயாரிக்கும் முறை: ஒரு ஜாதிக்காயில் எ...