நம் பண்டைய விவசாயப் பழமொழிகள் Farming proverbs
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு 🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் 🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு 🌝 களர் கெட பிரண்டையைப் புதை 🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 🌝 நன்னிலம் கொழுஞ்சி 🌝நடுநிலம் கரந்தை 🌝கடை நிலம் எருக்கு 🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை 🌝நம்பி வாழ்ந்தவனும் இல்லை 🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு 🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை 🌝 ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும் 🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும் 🌝 🌝மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 🌝 தை மழை நெய் மழை 🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு 🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். 🌝 அடர விதைத்தால் போர் உயரும் நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. அன்புடன் உங்கள் விவசாய நண்பன்