Posts

Showing posts from March, 2021

நஞ்சில்லா விருந்து Food without Poison

 நஞ்சில்லா விருந்து இன்று எங்கள் திருமண நாளையோட்டி என்ன விருந்து செய்யலாம் என்று தோட்டத்திற்கு சென்றால் கத்திரிக்காய், அவரைக்காய், நாட்டு தக்காளி கிடைத்தது! தினமும் இதையே தான் குழம்பு வைக்கின்றோம் மாற்றி யோசிப்போம் என்று முடிவெடுத்தேன்!! வெளிநாட்டு காய்கறியான கேரட் , பீன்ஸ், கோஸ்  போட்டு தான் சைவ பிரியாணி வைத்து உண்டு இருக்கின்றோம்!! சரி வித்தியாசமாக நமது நாட்டு காய்கறிகள் பிரயாணி வைத்தால் எப்படி இருக்கும் என்று எனக்கு எண்ணம்!! உடனே வேட்டிய  கட்டிகிட்டு கத்திரக்காய், அவரைக்காய் ,தக்காளி பறிச்சிட்டு சமையல்கட்டுக்கு போனேன்!! அங்க நம்ம அறல் கழனியில் விளைந்த சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் பல்ல காட்டிகிட்டு இருக்க!! எல்லாரையும் பிடிச்சு ஒட்ட வெட்டினேன்!!  நடுவுல ஆற்காடு கிச்சலி பச்சரசி ஒரு பாத்திரத்தில போட்டு தண்ணீர் ஊற்றி மேல எண்ணெய் கொஞ்சம் தெளித்து, அதிலேயே சோம்பு , இலவங்கம் போட்டு வெற வெறன்னு மிலிட்டிரி ஆபிஸர் மாதிரி வெடிச்சு வச்சிட்டேன்!!! அந்த பக்கம் நம்ம அறல் மரச்செக்கு நல்லெண்ணெய் 100 மில்லி வானல்ல போட்டு கத்தரி, அவரை மட்டும் தனி தனியா எண்ணெய்ல சூடா குளிப்பாட்டி ...

5 days task to nurture your health

 வணக்கம் 20 மார்ச் முதல் 25 மார்ச் வரை மருந்துணவு Task.....குழுவிலேயே செய்திகள் பகிரப்படும், இதில் பங்கேற்பவர்கள் மட்டும் குழுவில் சந்தேங்கள் கேட்க அனுமதி, மற்றவர்கள் தனிபதிவில் கேட்கலாம்,  நாளை இரவு முன்னேற்பாடாய் வாங்கிவைக்கும் பொருட்கள் பட்டியல் பதிவு செய்யப்படும்....🤝👍 கற்றது கையளவு.... முயற்சி என்பது விதைபோல அதை விதைத்துக்கொண்டே இருங்கள் முளைத்தால் மரம் இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம்...... வணக்கம் அடுத்த 5 days Task எல்லாரும் ரெடியா இருக்கீங்க, இன்று இரவு தேவையான பொருட்கள் பதிவு  செய்கிறேன், நமக்கு தெரியாத எதையோ சொல்லப்போறாங்க னு நினைக்காதீங்க, இல்ல சாப்பிடவே முடியாத பொருட்களா, இது நம்மால் முடியுமா, என்ற சந்தேகங்கள் துளியும் வேண்டியதில்லை, தெரிந்த உணவுகள் தான், அதனால் பயம் வேண்டாம், 5 நாள் சமைக்காத உணவுகள் எப்படி,  நிறைவா, நிறைந்த சத்துடன்சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்ளலாம், ஏற்கனவே இந்த குழுவில் பயணிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும், இந்த 5 நாள் முழுமையா இந்த உணவுகளை கடைபிடிச்சா கண்டிப்பா 2 கிலோ எடை குறையும், இந்த எடைகுறைவதால் சத்துக்கள் குறையாது சோர்வு இருக்க...

பாத்தி அமைக்கும் முறை

 பயிர்தொழிலில் இரு வகையாக பாத்தி அமைப்பர். நில மட்டத்திற்கு அமைக்கும் பாத்தியை குழிப் பாத்தி என்றும், நில மட்டத்திலிருந்து சற்று மேடாக அமைப்பதை பார் அல்லது மேட்டுப்பாத்தி என்பர். நீர் மற்றும் மழை குறைவாக இருக்கும் இடங்களில் முக்கியமாக கீரை சாகுபடிக்கு குழி பாத்தி சதுர அல்லது செவ்வக வடிவில் அமைப்பதுண்டு. மழை பொழிவு அதிகம் உள்ள இடங்களிலும், நீரை மிச்சப்படுத்துவதற்கும் செடி வளர்ச்சியை செம்மை படுத்துவதற்காக அமைக்கப்படுவது மேட்டுப்பாத்தியாகும். பாசனம் செய்ய வசதியாக இருக்க மேட்டுப்பாத்தியின் அகலத்தை சுருக்கி நீளவாக்கில் அமைத்து அதை ஒட்டி பாசனத்திற்கு கால்வாயும் அமைப்பர். இதை ஆங்கிலத்தில் bund and pit method எனக் கூறுவதுண்டு. மேட்டுப்பாத்தி அமைப்பில் நீரை 50% ற்கு மேல் மிச்சப்படுத்தலாம். அது மட்டுமல்ல செடியின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும். செடியின் வளர்ச்சி வேரின் வளர்ச்சியை சார்ந்து இருக்கும். வேர் படர்ந்து விரிவடைந்தால் செடியின் வளர்ச்சி அதற்கேற்றார் போல் அமையும். அந்த வகையில் இந்த மேட்டுப்பாத்தி, குழி முறையானது வேர் வளர்ச்சியை தூண்டும் ஓர் அமைப்பாக அமைகிறது. நீரானது சாய்மானம் அல்ல...

மண் வளம் Soil health வளமான மண் சத்தான காய்கறி ஆரோக்யமான வாழ்க்கை

 வணக்கம் வளமான மண் சத்தான காய்கறி ஆரோக்யமான வாழ்க்கை மண் வளம் பற்றி என்னோட புரிதலை இங்கே பகிர்கிறேன், (Mrs. Ajeetha Veerapandian) நீங்களும் மண்பற்றிய உங்கள் அனுபவங்களை பதிவிடலாம்........ நிலம்...மண் விவசாயம், மாடிதோட்டம் வாழ்நாள் முழுவதும் செய்தாலும் தினம் ஒரு அனுபவம்... மாடிதோட்டத்திற்கோ, விவசாயத்திற்கோ மண் வளம் மிக முக்கியம், ஒரு ஊரின் மண்வளத்தை வைத்துதான் இங்கே இந்த பயிர் விதைக்கலாம் னு கண்டுபிடிச்சிருவாங்க பெரியவங்க, நாமலும் மிக எளிமையா கண்டுபிடிக்கலாம், அதாவது மண்ணில் ஈரம், காற்று ஊடுருவும் தன்மை, மணம், இவையெல்லாம் சேர்ந்த பொலபொலப்பு தன்மை இருக்கவேண்டும்..... உதாரணமா எங்க ஊரை சொல்கிறேன், ( விருதுநகர் ).....எங்கள் கிராமத்தில் ( அயன்ரெட்டியாபட்டி ) , மழை நீரில் மட்டுமே விவசாயம் அதாவது மானாவாரி நிலம் ( மழைபெய்தால் விவசாயம் ).....அப்படியிருந்தாலும் அந்த மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகம் அதனால் நுண்ணுயிர்கள் அதிகம் வாழ்கிறது மண் மேலே பொலபொலப்புத்தன்மையோடு இருந்தாலும் வேர்பரவி அதன்பிடிப்புத்தன்மையும் பலமாகவும், அதிக வளர்ச்சியும் இருக்கு, ஆவணி புரட்டாசிதான் மழை....ஐப்பசி கார்த்திகை ...

மண் வளப்படுத்தும் முறை How to enrich your soil

 வணக்கம் மண் வளப்படுத்தும் முறை என் அனுபவம் புரிதல் by Mrs. Ajitha Veerapandian ...... துள்ளித்திரியும் வயதில் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆடு மாடு கோழி நாய் பூனை இப்படி ஏதாவது ஒரு உயிர், ஏன்  குருவி கூடுகள் கூட அதிகம் இருக்கும், மனிதன் மட்டுமன்றி எல்லா உயிரனங்களும் இணைந்து வாழும், ஒரு சங்கிலி தொடர்பு இருக்கும்..... காலையில் சாணி கலந்த தண்ணீர்தான் வாசல் தெளிப்பாங்க, இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, தண்ணி தெளிச்சிட்டு பெருக்கி கூடையில் அள்ளுவாங்க, ( இதில் எல்லா வீட்டு குப்பைகளும் அடங்கும் ) அப்படியே ஒரு வீட்டு ஒரு எருகிடங்கு இருக்கும் கொஞ்சம் ஊரைவிட்டு தள்ளி அதில்தான் குப்பைகள் சேகரிக்கப்படும், காலையில் ஒரு 6 மணிக்கெல்லாம் அள்ளிட்டு நண்பர்களுடன் சேர்ந்து போவோம், அந்த காலை நேரத்தில் பட்டாம்பூச்சிகள் அதிகம் பறக்கும், தும்பைசெடியில் அதிகம் நிற்கும் அந்த குப்பை கூடையை வைச்சே பட்டாம்பூச்சி பிடிப்போம் விடுவோம் இது காலைநேர விளையாட்டு, அந்த எரு கிடங்கில் செழிபான தக்காளி செடி, கேந்திப்பூ செடி கிடைக்கும் எடுத்துவந்து வீட்டில் நடுவோம், வெள்ளரி, மிதுக்கங்காய், மஞ்சள் பூசணி எர...

Gardening Tips to remove ants Benefits of Turmeric water

 சிவப்பு எறும்பு என்று வரும் போது சிறிய பெரிய வகை உள்ளது. வீட்டில் அதிகமாக இனிப்பு பண்டங்களில் சிறிய வகையே பெரும்பாலும் காணப்படும். இந்த வகை செடிகளில் காணும் போது அவை செடியில் உள்ள பூ, காய்களை அரித்துண்ணும். பெரிய எறும்பில் முசுறும் ஒன்று. அதிகமாக மாமரத்தில் காணப்படும். இவை மற்ற பூச்சி புழுக்களை உண்ணும் தன்மை கொண்டது. வெண்டையில்  சிறு  எறும்பு பூக்களை காய்களை பாதிக்கிறது என்றால் மஞ்சள் தூள் கரைசல் நல்ல பலனைத் தரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிரச்சனை தீரும் வரை தெளிக்கவும். நான்கைந்து தெளிப்பிற்கு ஒரு முறை மஞ்சள் தூளுடன் பட்டாணி அளவு வெற்றிலைச் சுண்ணாம்பு கலந்து ஒன்று அல்லது இரு முறை தெளிக்கவும். சுண்ணாம்பின் காரத்தன்மை அதாவது எரிக்கும் சக்தி பூச்சி புழுக்களை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பை அளவிலும் சரி அடிக்கடி தெளிப்பையும் கண்டிப்பாக தவிர்க்கவும். உப்பு களைச் செடிகளை கட்டுப்படுத்த பயன்படுத்துவர். ஆகையால் நீங்கள் எறும்பிற்காக பயன்படுத்த விரும்பினால் உட்பு கரைசலை களைச் செடி மேல் தெளித்து பார்த்த பின் முதன்மை செடிக்கு தெளிக்கவும். உப்பு கரைசல் நீர்த்த நிலையில் இருப்பது மி...

வேப்பம் பூ பங்குனி மாத அதிசயம் Neem tree Azadirachta indica Benefits of neem flower

 இந்த வேப்பம் பூ(Neem Tree -  Azadirachta indica )  தான் பங்குனி மாத அதிசயம். வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும். இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்... பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்... இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே... வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் அனைத்தும் ஓடிப்போகும் தானே...?  பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சார்.. இருக்கு. வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிள...

Organic pesticide/fertilizer preparation

 5 kg cow dung  5 litres -- cow urine 200 gm -- tobacco leaves 1kg --- red/ green chillies paste Mix all .leave for 2 days .  3rd day onwards filter and use  100 ml  in 10 litres  for plants. 250 ml for  coconut trees

வளம் கொடுக்கும் குப்பைக்கழிவுகள் Black Gold | How to make organic manure

Image
 வளம் கொடுக்கும் குப்பைக்கழிவுகள்..... நம் வீட்டு சமையலறை கழிவுகளை இரு வகையில் தோட்டத்திற்கு உரமாக்கலாம் ...... 1 .  காயவைத்து உபயோகிப்பது 2. மட்கவைத்து ( ஈரகழிவுகள் ) உபயோகிப்பது காயவைத்து உபயோகிப்பது.... நாம் காய்கறி நறுக்கும் போது கிடைக்கும் தோல், கீரை தண்டுகள், இப்படி நிறைய கிடைக்கும்..இதை அப்படியே சேர்த்துவைச்சா இடம் நிறைய தேவைப்படும், தோல் தண்டுகள் இப்படி கிடைப்பதை பொடியா நறுக்கி ஒரு பையில் போட்டு ஏதாவது வெயில் படும் இடத்தில் வைச்சிட்டு உங்களுக்கு தோனும் போது கிண்டிவிட்டா போதும் இப்ப அடிக்கிற வெயிலுக்கு சறுகா காய்ஞ்சிடும்.... இதை மாடிதோட்டம் வைக்கும்போது தொட்டிக்கு அடியில் இந்த காய்ந்த காய்கறி கழிவுகள் போட்டு அதன்மேல் மண் போட்டு செடி வைக்கலாம், காலபோக்கில் அந்த காய்ந்த காய்கறி கழிவுகள் மட்கி மண்ணோடு கலந்துடும்....இரண்பாவது இப்பொதுள்ள வெயிலுக்கு மூடாக்காகவும் உபயோகிக்கலாம்..... ஈரக்கழிவுகள் அதாவது அழுகிப்போன பழம், கீரைகள், வடிகட்டிய கசடுகள் இப்படிபட்ட கழிவுகளை ஒரு 10 லிட்டர் தண்ணீர் கேன் குழாயுடன் இருந்தாலும் நல்லது இல்லேனாலும் பரவாயில்லை, அதில் இந்த ஈரகழிவுகளை போட்டுட்டு...

கரும்பூலா Karumpoola /Phyllanthus reticulatus

Image
 வணக்கம் கரும்பூலாவின் இலை, குச்சி சில மருத்துவ குணங்கள் கொண்டது. கரும்பூலா  Karumpoola /  Phyllanthus reticulatus காற்றில் உள்ள சில நச்சு வாயுக்களையும் உறிஞ்சும் தன்மை கொண்டதால் கிராமங்களில் வீட்டு கூரையில் ஒரு கிளையை சொருகி வைக்கும் பழக்கமுண்டு (படிகாரம் போல !) இது ஒரு மிகச் சிறந்த உயிர் வேலி செடி... அரிதான கரும்பூலா மூலிகை, காடுகளிலும் அடர்ந்த மலைகளிலும் காணப்படும் ஒரு மூலிகையாகும், உடலுக்கு நன்மைகள் செய்வது மட்டுமல்ல, ஆன்மீக விஷயங்களுக்கும் முக்கிய பொருளாக கரும்பூலா விளங்குகின்றது...

அரிஸ்டோலோக்கியா கிராண்டிபுளரா Aristolochia grandiflora

Image
 இன்றய விதை சேகரிப்பில் தாவரவியல் பெயர் : அரிஸ்டோலோக்கியா கிராண்டிபுளரா Aristolochia grandiflora குடும்பம் : அரிஸ்டோலோக்கேசியீ (Aristolochacea) இதரப் பெயர் : பெலிக்கான் மலர் (Pelican Flower) வாத்து மலர் (Swan Flower) பிசாசு மலர் (Goose Flower) ஈ பிடிக்கும் பெரிய செடி ஆடு தீண்டாபாணை செடியின் அமைப்பு: படர்ந்து வளரும் கொடி. இலை இதய வடிவத்தில் இருக்கும். இக்கொடியில் பெரிய பூக்கள் வருகின்றன. பூ பறவையின் கழுத்து போல் வளைந்து இருக்கும். பார்ப்பதற்கு பெலிகான் பறவை ஓய்வு எடுக்கும் போது எப்படி இருக்குமோ அது போல் உள்ளதால் இதற்கு பெலிக்கான் மலர் என்று பெயர். பூவின் அமைவு தொகு ' இப்பூவின் வெளிப்பகுதி அகன்று இதய வடிவத்திலும், வளைந்து விளிம்பு ஊதா சிவப்புடன் கூடிய நரம்புகள் உடையது. இப்பூ 1½ அடி (50 செ.மீ) விட்டமும் 3 அடி நீளத்திற்கு மேல் வாலும் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரே பூவில் கேசரமும், சூலகமும் இருந்தாலும் சூலகம் முன்னாடி முதிர்ச்சியடைகிறது. பூ இதழ்கள் குழாய் வடிவமானது. இதனுள் ஈட்டி போன்ற முடிகள் கீழ்நோக்கி வளைந்திருக்கும். பூவின் வாசனையால் ஈக்கள் எதிளில் உள்ளே சென்று விடும். ஈக்கள் வெளியே ...

விதை சேமிப்பு Seed collection and preservation

 விதை சேமிப்பு... நாம எல்லாரும் நிறைய செடி வளர்ப்போம், ஆனா அதிலிருந்து விதை எப்படி எடுக்கனு தெரியாமல் இருப்போம், அல்லது தோனாது, ஆனா இன்றைய கால சூழ்நிலைக்கு விதைகள் சேகரிப்பு மிக அவசியம், ஒவ்வொரு முறையும், விலைக்கு வாங்குவது அவசியமில்லாத ஒன்று, ஒரு செடி வளர்த்தால் அதில் காய்கள் பறிச்சு சிறிது நாள் ஆனதும் விதை எடுத்து வைப்பது அவசியம், இதில் பழங்களாக இருந்தால் நன்கு பழுக்கவைத்து விதை பிரித்து நிழலில் உலர வைத்து அதில் சாம்பல் கலந்து வைத்தால் மறுவருடம் நமக்கு பயன்படும், பூச்சிகள் விழாமல் விதையை பாதுகாக்க அமாவாசை இரவு நிலவொளியில் வைத்து பகலில் அதிக வெயில் இல்லாமல் சூரிய ஒளியில் வைப்பது நல்லது, உதாரணமா வெள்ளரி விதை சேகரிக்கும் போது நீரில் மூழ்கும் விதைகளே தேரிந்தெடுத்துவைக்கவேண்டும், மிதக்கும் விதைகள் முளைக்காது, ஒரு சில விதைகள் முற்றியவுடன் காய்கள் வெடித்து சிதறிவிடும், உதாரணமா வெண்டைக்காய், கனகாம்பரம், சங்குப்பூ, அதன் காலமறிந்து சரியான நேரத்தில் எடுத்து சேமிக்கவேண்டும், கிராமங்களில் எளிதா விதையை தேர்வு செய்து சேமிச்சிருவாங்க, ஒரு மூட்டை மொச்சைகாய்கள், தட்டைப்பயிர்கள் கொட்டிக்கிடந்தாலும்...

வெற்றிலை நடவு செய்யும் முறை How to plant Betel

Image
  வெற்றிலையில் இந்த வேர் விட்டபகுதி, அதாவது கனு இருக்குபார்தீங்களா அதற்கு கீழ அரைவிரல் அளவு மண்ணுக்குள் போறமாதிரி, இந்த கனுவும் மண்ணுக்கு மேலயும் இல்லாம மண்ணுக்கு உள்ளயும் இல்லாம  இருக்கனும், முழுசா நிழலும் இருக்கக்கூடாது அதிகமான வெயிலும் இருக்ககூடாது , ஆதாவது சுவர் ஓர வெயிலும் நிழலும் போதுமானது, வளரும் வரை ஈரம் காயகூடாது, வளர்ந்ததும் வழக்கமா தண்ணி ஊத்தறமாதிரி ஊற்றலாம், இந்த செடிக்கு வாழைபழத்தோல்  நல்ல உரமா இருக்கும்..... Mrs. Ajitha 

ஆப்பிரிக்கன் ஜியான்ட் ஸ்னைல் Achatina fulica மற்றும் செம்பகம் Centropus sinensis உருவாக்கிய புது உணவுச் சங்கிலி

Image
 நம்மில் அனேகம்பேர் சென்னையின் அந்த கால வயல்வெளிகளில் தான் வீடு கட்டி குடியேறியுள்ளோம். களி நிறைந்த இப்பகுதிகள் நெல், பனை வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்திருக்கிறது !! இந்த களியில் ஆப்பிரிக்கன் ஜியான்ட் ஸ்னைல் (Giant African Snail -  Achatina fulica ) என்கிற இந்த நத்தை செழித்து வளர்கின்றன   4, 5 வருடங்கள் ஆயுள் கொண்ட இவ வருடத்திற்கு 2500 முட்டைகள் இடுபவனாம். சுமார் 500 வகைகள் நம் பயிர்களை கபளீகரம் செய்ய வல்லவை. இதற்கு எதிரிகளே கிட்டத்தட்ட இல்லை. 10 வருடங்கள் முன் நான் கஜியாபாத், அரசு அலுவலகத்திலிருந்து இதற்கான  ஒரு ஒட்டுண்ணி வண்டு கொண்டு வந்து விட்டும் பார்த்தேன். ஹூ ஹும் சமீபத்தில் இங்கு வந்திறங்கியுள்ள பெங்கால், அஸ்ஸாம் தொழிலாளிகள் இதை சமைத்து உண்பதாக இன்னொரு குழு நண்பர் சொல்லியிருந்தார் இன்னிலையில் கடந்த வாரமாக கவனித்ததில் இந்த நத்தைகளை  செம்போத்து (Greater coucal or Crow pheasant, Scientific name : Centropus sinensis ) என்கிற குயில் ரகப் பறவை எடுத்க்சென்று உண்ணுகிரதை கவனிக்க முடிந்தது . .. இதுவும் ஒரு உணவுச்சங்கிலியின் அங்கம் என்பதறிய மகிழ்ச்்சி  போட்...