மாடித்தோட்டத்தில் வைக்கும் பைகளின் அளவு என்னென்ன செடிகள் வைக்கலாம்? Growbag sizes and selected plants for that growbags

12இஞ்ச் × 12இஞ்ச்

 (ஒரு அடிக்கு ஒரு அடி )

இந்த அளவுள்ள பையில் முள்ளங்கி, பீட்ரூட், கேரட், தக்காளி, மணத்தக்காளி கீரை, புளிச்சைக் கீரை, இஞ்சி, மா இஞ்சி, மஞ்சள், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற செடிகளும் கற்பூரவள்ளி எனும் ஓமவல்லி, துளசி, பிரண்டை போன்றவற்றையும் வைக்கலாம். 


12 இஞ்ச் × 15இஞ்ச்

 ஒரு அடிக்கு ஒன்னேகால் அடி

தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், கொத்தவரை போன்றவை ஒரு செடி மட்டும் வைக்கலாம். திருநீற்றுப்பச்சை, தூதுவளை போன்ற மூலிகைகள் வைக்கலாம். 


 

15 இஞ்ச் ×15 இஞ்ச்

 ஒன்னேகால் அடிக்கு ஒன்னேகால் அடி


 இதில் கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, குடைமிளகாய் போன்ற   அதிகப்படியான காய்கள் காய்க்கும் செடிகளை வைக்கலாம். இரண்டு செடிகள் வரை வைக்கலாம். சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, 

சர்க்கரைவள்ளி கிழங்கு

 போன்ற கிழங்கு வகைகளையும் இதில் வைக்கலாம்.

தூதுவளை, பிரண்டை போன்ற மூலிகைகள் இதில் தாராளமாக வளரும். 


15 இஞ்ச் × 9 இஞ்ச்

 கீரை பை கீரைகளில் சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, புதினா, வெந்தயம், கொத்தமல்லி, வெங்காயம் போன்ற அனைத்து சிறு வேர் அமைப்பு உள்ள கீரை வகைகளை வைக்கலாம்.

குறிப்பாக வெங்காயம், பூண்டு போன்றவைகளை  இதில் நன்றாக வளர்க்கலாம்.


18 இஞ்ச் ×18 இஞ்ச் 

( ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி )


இதில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சௌசௌ, அவரைக்காய் போன்ற கொடிக்காய் வகைகளையும், ரோஜா செடிகள்,  செம்பருத்தி போன்ற நீண்ட நாட்கள் வாழக்கூடிய பூ வகைகளையும் வைக்கலாம் , குண்டுமல்லி, முல்லை, போன்ற வகைகளை கொடியாகப் படர விடாமல் குத்துச் செடிகளாக கவாத்து செய்து வளர்க்கலாம். அகத்திக்கீரை, தவசிக்கீரை இரண்டுக்கும் இந்த அளவு மிகப் பொருத்தமானது.


24 இஞ்ச் × 24 இஞ்ச்


 இரண்டு அடிக்கு இரண்டு அடி


இதில் கொய்யா, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா, வாழை, கறிவேப்பிலை, முருங்கை  போன்ற மர வகைகளும் மற்றும் பூச்செடிகளில் மல்லிகை வகைகளையும்,  திராட்சை கொடியையும் வளர்க்கலாம்...

Comments

Popular posts from this blog

மூக்குசளி பழம் (அல்லது) நறுவல்லிபழம் CARDIA DOCHOTOMA

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

"Ponniyin Selvan" of Kalki Krishnamurthy Part 1-A New Floods Chapter 2 -- Azlvar-adiyan Nambi Tamil Historic Novel about the Great King Raja Raja Cholan