Posts

Showing posts from February, 2022

மன அழுத்தத்தை குறைக்க 9 எளிய வழிகள் Remedies for Stress mental pressure relief

Image
1. Have a laugh   ஒவ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும். 2. Spend time with your pet நம் வீட்டில் உள்ள விலங்குகளுடன் நேரம் செலவிடும் போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன. 3. Get rid of the clutter நாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்க வேண்டும். 4. Do the housework வீட்டில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளவும். இதையடுத்து வீட்டில் செய்ய வேண்டிய நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும். 5. Drink juices ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து, உடலை திறம்பட செயல்பட வைக்க முடியும் என்று ஆராய்ச்சி...

Trees of Tamil Nadu || What trees are native to Tamil Nadu? || Places with Tree Names in Tamil Nadu

Image
  Some areas named after trees Pelathope in Mylapore - Pala Thoppu (jackfruit orchard) Mambalam - Mango fruit Triplicane - Thiru-Alli-Keni (sacred lily pond) Teynampet -Thengai or coconut trees) Purasawalkam - the Purasu tree (flame of the forest tree, Vepery – Neem Koyyathoppu - Guava orchard Pulianthope - tamarind orchard Panayur - palm village Athipet - fig tree, Poonamallee - poo-virunda-malli (malligai or Arabian jasmine) Perambur - cane trees Alandur - Banyan village Thiruvalangadu - sacred banyan forest Illuppaithoppu butternut tree orchard Irumbuliyur near Vandalur - Ironwood tree Thiruverkadu - vilvelam tree Mangadu - Mango forest Thirumullaivoyal - mullai or jasmine plants,, India is losing its green cover and we know that we are lagging behind in making up for it. But it's good to know about the vegetation that grows in our country. We are talking about trees. You'll be surprised to know that India is home to a large variety of trees. It was not possible to compile a...

Cure for PCOD problem in Tamil Iyarkkai maruthuvam... PCOD prachanai ku marunthu

  ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை வீக்கம் குணமாகும். l ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும். l கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி அல்லது மாத்திரை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப் பை தொந்தரவுகள் நீங்கும். l வாழைப்பூ சாறு அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் நீங்கும். l அரச மரத்து இலையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட அல்லது அத்தி விதையைப் பசும் பாலில் அரைத்துச் சாப்பிட endometrial thickness அதிகரிக்கிறது l உளுந்தங்களி செய்து சாப்பிடப் பெண்களுக்கு கர்ப்பக் குழி சுத்தமாகும். அதைப் போல் முருங்கைப் பூவையும் சாப்பிடலாம். இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்துப் பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள்வரை குடித்தால் நல்லது. l சதகுப்பை, எள், கருஞ்சீரகம் சூர்ணம் (amenorrhoea) மாதவிடாய் வராத தன்மையில் பலன் அளிக்கிறது. l அதிக ரத்தப்போக்கு உள்ள நிலைகளில் சதா...

தமிழ்உச்சரிப்பு சரியாக வர சில தமிழ் வார்த்தைகள்

Image
  உங்களுக்குத் தெரிந்த தமிழ் வார்த்தை விளையாட்டினை பகிரலாமே.. ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம். கடலோரத்தில் உரல் உருளுது, புரளுது, தத்தளிக்குது, தாளம் போடுது. யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை ஊழிக்காற்று,பாழும் கிணறு, கூழைக்குடி. வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான். பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது. கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட. வியாழக்கிழமை கிழட்டு ஏழை கிழவன் வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான். வாழைப் பழம் வழுக்கி கிழவி வழியில் நழுவி கீழே விழுந்தாள் ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நரை முடி கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது யாரு தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை ஆனை அலறலோடு அலற அலறியோட கடலோரம் உரல் உருளுது. கடலோரம் உரல் உருளுது! புட்டும் புதுப் புட்டு தட்டும் புதுத் தட்டு புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா. வீட்டுக்கிட்ட கோரை வீட்டுக்கு மேல கூரை கூரை மேல நாரை. துள்ளும் கயலோ வெள்ளம் பாயும் உள்ளக் கவலை எள்ளிப் போகும். கருகும்...

அளவு முறைகள் Tamilan Scale

  ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம். ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம். இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை. இரெண்டரை நாழிகை = ஒரு மணி. அளவைகள் உளுந்து (grain) – 65 மி. கி. குன்றிமணி - 130 மி. கி. மஞ்சாடி - 260 மி.கி. மாசம் - 780 மி.கி. பனவெடை - 488 மி.கி வராகனெடை - 4.2 கி. கழஞ்சு - 5.1 கி. பலம் - 41 கி. (35 கி.) கஃசு அல்லது கைசா - 10.2 கி. தோலா - 12 கி. ரூபாவெடை - 12 கி. அவுன்ஸ் - 30 கி. சேர் - 280 கி. வீசை - 1.4 கி.கி. தூக்கு - 1.7 கி.கி. துலாம் - 3.5 கி.கி 32 குன்றிமணி 1 வராகன்(வராகனெடை) 1.067 கிராம் 10 வராகனெடை 1 பலம் 10.67 கிராம் 8 பலம் 1 சேர் 85.33 கிராம் 5 சேர் 1 வீசை 426.67 கிராம் 1000 பலம் 1 கா 10.67 கிலோகிராம் 6 வீசை 1 துலாம் 2.560 கிலோகிராம் 8 வீசை 1 மணங்கு 3.413 கிலோகிராம் 20 மணங்கு 1 கண்டி (பாரம்) 68.2667 கிலோகிராம் கரண்டி அளவுகள் 1 தேக்கரண்டி - 4 மி.லி 1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி) 1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி 1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி) 1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 ப...

அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.

 அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த  சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது. வரும் 10/15 ஆண்டுகளில் அன்பாலும் பாசப்பிணைப்பாலும் கட்டமைக்கப்பட்ட மற்றும் தர்மத்திற்கு கட்டுப்பட்ட ஒரு மூத்த தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது. இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.! இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,  காலையில் நடை பயிற்சிக்கு செல்பவர்கள் வீட்டு தோட்டம், செடிகளுக்கும் தண்ணீர் விடுப்பவர்கள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மருதாணி, செம்பருத்தி தன் வீட்டிலேயே வளர்ப்பவர்கள். கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து பிரார்த்தனை செய்பவர்கள்...! தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள், வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிப்பவர்கள்...! வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்... அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம், அவர்களும் வித்தியாசமானவர்கள்... திருவிழாக்கள், விருந்தினர் உபச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் ...

108 நாள் பயிற்சி முடிந்தவரை சிறப்பாக முடிந்தது

 108 நாள் பயிற்சி முடிந்தவரை சிறப்பாக முடிந்தது  மீன்டும் 108 நாள் தொடர்ந்தால் நம் வாழ்கை நடைமுறை பழக்கம் ஆகிடும் என நினைக்கிறேன்  நான் பல்விளக்குவது மாறிடிச்சி  குளிப்பது மாறீடீச்சி  சூரிய வெளிச்சம் உள்வாங்குதல்  சாப்பிட்டா இப்போதெல்லாம் வெற்றிலை போடதோனூது இன்று மதியம் கூட வெற்றிலை போட்டேன்  குளிப்பதில் மிக பெரிய மாற்றம் சோப்பு சேம்பு போட்டு குளீப்பாதே இல்லை  பப்பாளி தயிர் என அவ்வப்போது எடுத்து கொள்கிறேன்  அப்புரம் அதிகாலை தூக்கம் தெளிகிறது அலாரம் வச்சு எழுந்தது போய் இப்போ சாதரணமாகவே எழமுடிகிறது  சாப்பிடுவதை மென்று சாப்பிடுகிறேன் கூடுமான வரை அரிசியை தவிர்த்து சிருதானியங்களை நாடிவிட்டேன்  பேரிச்சை முந்தரி நேந்திரம் போன்றவைகள்சினாக்ஸ்சாக மாறிவிட்டது  நைட்டு கொசுவத்தி இல்லை மின் விசிரி இல்லை தூக்கம் வருகிறது  காலை மாலை இருவேளையும் மலம் கழிக்கிறேன்  முளைகட்டிய தானியம் நிறை சாப்பிட சொல்லுது கடுக்காய் தேனீர் சாப்பிடுகிறேன் மற்ற நேரங்களிலும்  தெனை சாமை கஞ்சி இப்பலாம் பிடிக்கிது பல் விளக்கும் போது மேல் கீல் உள் பூராவும்...

108 நாள் பயிற்சி அடிப்படை பயிற்சி.

 அனைவருக்கும் வணக்கம் 🙏 108 நாள் பயிற்சி அடிப்படை பயிற்சி... அடுத்து நாம பார்க்கப்போறது,  108 நாளில் சொன்ன ஒவ்வொரு பயிற்சியையும் 21 நாள் செய்யப்போறோம்..... அதில் முதலில் செய்யப்போவது,  தந்த சுத்தி...... தந்த சுத்திஎன்றால் என்ன னு நம் குழுவில் அனைவருக்கும் தெரியும் பல் விலக்கறது தான் தந்த சுத்தி...... என்னடா குழந்தையா இருக்கும்போதிருந்து பல் விலக்கிறோம்,  இவங்க என்ன புதுசா சொல்லப்போறாங்க....னு நீங்க நினைக்கிற mind voice கேக்குது...... இந்த பயிற்சியில், பல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது உறுதி...... சரி செய்யறோம் னு சொல்விட்டா, * போட்டோ எடுத்து குழுவில் போடனும் * தினமும் பதிவு செய்யனும் எதுக்கு வம்பு னு நினைக்காதீங்க.... எதுவுமே ஒரு குழுவா இணைஞ்சு செய்யும்போது ஒரு ஊக்கம் கிடைக்கும்,  பலன் நிறைய இருக்கும்..... எந்த ஒரு பயிற்சியும் தெரிஞ்சிக்கிட்டா போதாது,  செய்துபார்த்தா அதன் முழுபலன் கிடைக்கும்...... இருந்த இடத்திலேயே பயிற்சி,  பணம் எதுவும் செலவில்லை  உங்க பல் பலம்பெற, சக்திபெற பயிற்சி.... யாரோ உங்களுக்காக இவ்ளோ மெனக்கெடும்போது.... ...

பிரண்டை சோற்றுக் கற்றாழை கரைசல்

 பிரண்டை சோற்றுக் கற்றாழை கரைசல்   இயற்கை Vs செயற்கை   இயற்கை விவசாயத்தில் பூச்சி மற்றும் நோய்ககட்டுப்பாடு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் சவாலான விஷயம். இரசாயன விவசாயத்தில் இந்த சவாலினை சமாளிக்க முதல் தேர்வே பூச்சிக்கொல்லி எனும் நஞ்சே. ஆனால் இதனால் வரும் பின்விளைவுகள் என்பது நாம் எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று.  இயற்கை விவசாய முறையில் இவை அனைத்தும் சாத்தியமே. நாம் நமது வீட்டின் அருகிலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இதற்கு தீர்வு காண முடியும்.   பிரண்டை கசாயம்   பயிர்களில் சேதத்தை விளைவிக்கும் அசுவினி, இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் பிரண்டை கசாயம் மிக குறைந்த செலவில் தயாரிக்கும் முறையை மேட்டூரைச் சேர்ந்த ஈஷா இயற்கை விவசாயி திரு குணசேகரன் விவரிக்கிறார்.   தேவையான பொருட்களும் செயல்முறைகளும்   சிறு துண்டுகளாக்கப்பட்ட பிரண்டை - 3கிலோ  சோற்றுக் கற்றாழை - 3கிலோ  கோமியம் 10 லிட்டர்  புகையிலை ½ கிலோ  மஞ்சள் தூள் 25 கிராம்  பெருங்காயம் 25 கிராம்    துண்டுகளாக்கப்பட்ட பிரண்டை மற்றும் சோற்றுக...

வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டதிற்கு தேவையான தரமான நாட்டு விதைகள் கிடைக்கும். Native vegetable seeds for sale

 வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டதிற்கு தேவையான தரமான நாட்டு விதைகள் கிடைக்கும். தொடர்புக்கு 9345416066 செடி விதைகள் 1. நாட்டுத்தக்காளி 2. சிகப்பு தக்காளி 3. நீள மிளகாய் 4. குண்டு மிளகாய் 5. குடை மிளகாய் 6. குண்டு கத்திரி(ஊதா) 7. நீள கத்திரி 8. வரி கத்திரி 9. பச்சை கத்திரி 10. வெள்ளை கத்திரி 11. முள் கத்திரி 12. மணப்பாறை கத்திரி 13. செவந்தம்பட்டி கத்தரி 14. வெண்டை (பச்சை) 15. வெண்டை (வெள்ளை) 16. யாணைத் தந்த வெண்டை 17. சிகப்பு வெண்டை 18. மலை வெண்டை 19. நீள வெண்டை 20. செடி அவரை 21. செடி முருங்கை 22. யாழ்ப்பான முருங்கை 23. நாட்டு முருங்கை 24. முருங்கை பீன்ஸ் 25. கொத்தவரை 26. செடி பீன்ஸ் (White) 27. செடி பீன்ஸ் (Brown) 28. செடி பீன்ஸ் (French Bean) 29. சின்ன வெங்காயம் 30. பெரிய வெங்காயம் 31. பொரியல் தட்டை (காராமணி) 32. வெள்ளை முள்ளங்கி 33. சிவப்பு முள்ளங்கி 34. பீட்ரூட் 35. கேரட் 36. முட்டைகோஸ் 37. பூ கோஸ் (Cauliflower) 38. பச்சை கோஸ் (Broccoli) 39. டர்னீப் 40. நூல்கோல் 41. பப்பாளி 42. இனிப்பு சோளம் (ஊதா) 43. இனிப்பு சோளம் (மஞ்சள்) 44. மக்காச் சோளம் (சிவப்பு) 45. மக்காச் சோளம் (மஞ்சள்) கொ...

தென்மாவட்ட உழவர்கள் கலந்துரையாடல் Conference of of TN south district farmers

 தென்மாவட்ட உழவர்கள் கலந்துரையாடல்,  சந்திப்பு மற்றும் ஒருங்கிணைப்பு: **************          இன்றைய சூழலில் யார் ஒருவரும் கணிக்க முடியாத நிலையில் பருவநிலை மாற்றமடைந்துள்ளது . இந்நிலை தொடந்து நீடித்தால் இப்புவியில் மனிதர்கள் வாழ்வு என்பது கேள்விக்குறி தான் என்பதை நம்மாழ்வார் ஐயா ஒவ்வொரு நாளும் சுட்டிக் காட்டினார்.        இதன் விளைவாக ஒருபுறம் மேக வெடிப்பால் வெள்ளமும் , ஒருபுறம் மழையில்லாமல் வறட்சியும் தொடர்கிறது. நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கிறது.        அதைத் தான் இந்தாண்டுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் பார்க்கிறோம். விதைக்கும் நேரத்தில் மழை பெய்யாது அறுக்கும் நேரத்தில் கொட்டி தீர்த்துவிடுகிறது. விதைத்த தானியங்கள் வீடு வந்து சேர்ப்பதே நெருக்கடி. அந்தளவுக்கு பன்னாட்டு வணிக முறையால் வேளாண்மையும், வாழ்வியலும் சிதைந்துள்ளது.            இந்நிலையை கருத்தில் கொண்டு செலவு குறைந்த நிலைத்த நீடித்த வேளாண்மை முறையை , இன்று நம்மாழ்வார் ஐயா வழி உழவர்கள் பின்பற்றி வெற்றிகரமாக வாழ்ந்து வருகிறார...

மரகன்றுகள் நாற்று விட ஏற்றது இந்த பருவம் Native tree seeds available contact whatsapp

  மரகன்றுகள் நாற்று விட ஏற்றது இந்த பருவம். இந்த தை மாதத்தில் நாற்று விட்டு ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் மரகன்றுகளை நடவு செய்யலாம். அதற்கான மர விதைகள் கொடுத்து வருகிறோம். கீழ்க்காணும் மர விதைகள் உள்ளது. தேவைப்படுவோர் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்து விதைகள் பெற்றுக்கொள்ளலாம். மருதாணி Henna தான்றிக்காய்- Bastard myrobalan வேங்கை- Indian Kino Tree வெப்பாலை- Sweet Indrajao ஆலம்- Banyan fig அரசு- sacred fig வன்னி- Khejri Tree சுபாபுல்- Subabul நாட்டு கருவேல் Babool குமுள்- Gamhar பூந்திக்கொட்டை- soapnut பெருநெல்லி- amla கொய்யா - Guava மாதுளை- Pomegranate புளி- Tamarind நீர்மருது Arjun tree வாதாங்கொட்டை Indian-almond புங்கம்- pongam tree கருங்கொன்றை- Red cassia-Rose tree நெட்டிலிங்கம் false ashoka தோதகத்தி -ஈட்டி - Indian rosewood ஆணைகுண்டுமணி- Barbados pride மந்தாரை- Purple Orchid Tree பூவரசு Indian tulip மஞ்சக்றொன்றை golden shower cassia பென்சில்- Earleaf acacia முள்பரம்பை Rusty Acacia தண்ணீர்காய்மரம் - கருவாகை black siris சந்தனம்- Sandalwood தேத்தான்கொட்டை clearin...

உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும் Fertilizing techniques for plants gardening tips

 எத்தகைய உரமோ வளர்ச்சியூக்கியோ எதுவாக இருந்தாலும் குறைந்தது 15-20 நாட்கள் இடைவெளியில் தான் தரவேண்டும்.  ஒவ்வொரு இடுபொருளையும் முறை வைத்து மாற்றி மாற்றி தாருங்கள். கொடிவகைகளில் எளிதில் பூஞ்சாண தொற்று ஏற்படும். காலைவேளையில் 4/5 நாட்கள் இடைவெளியில் மஞ்சள்தூள் கரைசல் தொடர்ந்து தெளித்து வரவும். கொடி என்று வரும்போது வழக்கத்தைவிட இரண்டு மூன்று மடங்கு பெரிய பை அல்லது பிரிட்ஜ் அல்லது பெரிய தெர்மோகோல் பெட்டியை பயன்படுத்தவும். கொடி ரகங்களுக்கு இலைமக்கு அல்லது தொழுவுரம் 15/20 நாள் இடைவெளியில் சிறிய அளவில் தொடர்ந்து தருவது நல்ல பலனை கொடுக்கும். பெரிய தொட்டி வேர் வளர்ச்சிக்கு உதவும். வேர் வளர்ச்சியை சார்ந்து புதிய கொடி உருவாகி பூத்து காய்க்கும். மேலுரம் கொடி வளர்ச்சி, பூத்து காய்ப்பதற்கு துணைபுரியும். அளவிற்கு மீறிய இடுபொருள் குறைந்த கால இடைவெளியில் தருவது எந்த செடிக்கும் நல்லதல்ல.

கோவை ஆனைகட்டி சத்தர்சனில் அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம் cooking without fire

Image
 🌿🙏ஆத்ம வணக்கம்ங்க பிப்ரவரி 12, 13, இரண்டு நாட்கள் நம்ம கோவை ஆனைகட்டி சத்தர்சனில் அடுப்பில்லா சமையல் பயிற்சி முகாம்☀️🔥🌿 ➖➖➖➖➖➖➖➖ 🔹 நமது இல்லத்தில் ஆரோக்கியம் அளிக்கும் அடுப்பில்லா உணவுகளை தயாரிக்க... 🔸 இயற்கை அங்காடி, இயற்கை தயாரிப்பில் உணவகங்கள் அமைத்திட... 🟩 இயற்கை உணவு தயாரிப்பு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக... 🔆இந்த பயிற்சி ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 🔺எளிய மலையேற்றம் பயிற்சி, மண்குளியல், தியானம் நுட்பங்கள் கற்றுதரப்படும் பயிற்சியில் கற்றுக் கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை உணவு முறைகள்: 🌼ஜூஸ் வகைகள் 🫐கீர் வகைகள் 🥥மில்க் ஷேக் 🥗சாலட் வகைகள் 🍛இயற்கை இட்லி 🥛இயற்கை பால், தயிர் 🍚உப்புமா, கிச்சடி, 🫑பிரியாணி 🍓லட்டு வகைகள் 🥒துவையல், பச்சடி  🍵பொங்கல், சட்னி 🍹பானகங்கள் 🌽நொறுக்கு தீனிகள் 🌿மூலிகை சாறுகள் இன்னும் பல... இயற்கை சூழலில் தங்குமிடம் உணவு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்பவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். நாள் : பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் , 13 ஞாயிறு மாலை 5 மணி வரை இரண்டு நாள் பயிற்...

வயிறு சுத்தம் செய்திட மாத்திரை போடாமல் இயற்கை முறை Stomach cleaning without Tablet/hospital

 1.      4 கடுக்காய் விதை நீக்கி தோலை எடுத்து சுத்தம் செய்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து ஒரு டம்ளர் ஆனபின்பு ஆறவைத்து வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும், கடுக்காய் கஷாயம் எடுக்கும் நாட்களில் காலை கஞ்சி உணவு நல்லது அசைவம் தவிர்ப்பதும் நல்லது. (ஆறு மாதங்களுக்கு ஒரு  முறை  போதும்) 2.        வெகு வெதுப்பான நீரில் (1-2லிட்டர்) ஒரு எலுமிச்சை பழச்சாறு கலந்து கல் உப்பு கலந்து விடிய காலை மெதுவாக குடிக்கலாம். உப்பு சிறிது கரித்தாற்போல் இருந்தால் நல்லது. பிறகு வீட்டிற்குள்ளேயே சில நிமிடம் நடந்தால் உடனே வந்துவிடும் 3. 1L 200 ml வெதுவெதுப்பான குடிக்கும் நீரில் (கண்ணீர் உப்பு அளவு )கல் உப்பு கலந்து மெதுவாக குடிக்கவும். அதிகாலை வெறும் வயிற்றில் உள்ள போதுதான் எடுக்க வேண்டும். பின்னர் தாடாசனா செய்யலாம். கழிவு 3,4முறை வெளியேறிய பின்னர் வெதுவெதுப்பான நீர் 1டம்ளர் குடிக்கவும். திரும்பவும்2, 3 முறை வெளியேறும்.  சிறுநீர் போன்று போகும் போது நிறுத்த நாட்டு சக்கரை கலந்த நீர் 1டம்ளர் குடிக்கவும். நின்று விடும். இதை செய்யும்  அன்று மி...

ஜல நேர்த்தி ( மூக்கு கழுவுதல் ) Nose cleaning Method

 அனைவருக்கும் வணக்கம் 🙏 ஜல நேர்த்தி ( மூக்கு கழுவுதல் ) இதைபற்றி நிறைய சந்தேகம் அனைவரும் கேட்டதால் மீண்டும் இந்த பதிவு 👇 மருந்து மாத்திரை இல்லாமல்,   எந்த பத்தியம் இல்லாமல்... சாதாரண நீரை வைச்சு சளியை அகற்றலாம்..... இதற்கு 30 ரூபாய் மூக்குகுவளை போதுமானது    நம்பிக்கையா தொடர்ந்து செய்யனும் கடைபிடிக்கும் முறைகள் 👇 குவளையில் முக்கால் பங்கு தண்ணீர், 2 கல் உப்பு போட்டு, நம் கண்ணீரின் அளவு சூடா நீர் வைச்சிக்கோங்க, உப்பு கரையனும்.... அடுத்து மூக்கு கழுவ ஆரம்பிக்கும்முன் செய்யவேண்டியது 👇 * செய்யும்போது மூக்கில் அடைப்பு இருக்க கூடாது,  இருந்தா காது, மண்டை க்கு நீர் ஏறிடும் ஒரு வித எரிச்சல் இருக்கும்,  உயிருக்கு ஆபத்து இருக்காது,  சிறிது நேரத்தில் சரியாகிடும்.... எப்படி மூக்கடைப்பை சரிசெய்துட்டு செய்யறது 👇 வேகமான மூச்சுபயிற்ச்சி செய்துட்டு மூக்கு கழுவ ஆரம்பிக்கனும், குழுவில் பலமுறை சொல்லியிருக்கேன்.... இல்லேனா குதிச்சாலும் மூக்கடைப்பு சரியாகும்.... மூக்கடைப்பு சரியானதும்👇 L வடிவத்தில் குனிந்து தலையை சாய்த்து, நாக்கை வெளியே நீட்டி வாய்வழி மூச்சைவிட்டு ...

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும் Healthy Snake guard

 புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும். அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும். இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும். புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சி...

குட்டி கதை உங்கள் வழ்க்கையை மாற்றும் A short story which will change your life

 கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன. பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது . ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெ...